அந்தமான் காதலி
-------------------------
பொன்மாலை பொழுது, மனதை மறைத்தது சலனம்
புரிவதற்குள் புகுந்துவிட்டாள் !
எங்கிருந்து வந்தாய் என வினவும்முன்
வீழ்ந்துவிட்டேன் அவளிடத்தில்!
ஆங்கிலேயரின் கடைசி அடிமை நான்தான் போலும்
என்றளவிற்கு மனம் அடிமைபட்டது.
சிலகாலம் சிரித்ததும், சத்தமின்றி அழுததும்
வந்து வந்து செல்ல
விழிப்பில் ஓர் கனாபோல்
வந்தவள் கலையத்தொடங்கினள்.
வந்தது தேவதையல்ல தீச்சுடருமல்ல
தேய்ந்துபோன என் நினைவுகள்.
சர்ச்சைக்குரிய ஆரியரைபோல்
வந்தது முழக்கத்துடன்
சென்றது தடம் தெரியாமல் .